வெள்ளி, 5 ஜூன், 2015

சிகான் இராமச்சந்திரனின் முதலாவது வருட நினைவு தின நிகழ்வு

பாடசாலை மாணவர்களுக்கான தரப்படுத்தல் பரீட்சையும் சிகான் இராமச்சந்திரனின் முதலாவது வருட நினைவு தின நிகழ்வு நாளை (06) அக்கரைப்பற்று இராமகிருஷ்ணமிஷன் மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியரும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின்  தலைவருமான அமரர் சிகான். கணபதிப்பிள்ளை இராமச்சந்திரனின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்சி கே.கேந்திரமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ள நினைவு தின நிகழ்வுகளில் பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், பிரதிக்கல்விப்பணிப்பாளர் வி.குணாளன்மட்டக்களப்பு கல்வி அபிவிருத்தி நிலையத்தின் ஸ்தாபகர் எஸ்.தேவசிங்கம், கிழக்கு மாகாண ஜே.கே.எம்.ஓ கராத்தே சங்க தலைவர் கே.சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது நடைபெறும் தரப்படுத்தல் பரீட்சையில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து கறுப்பு பட்டி மாணவர்கள் உட்பட அதிகளவான மாணவர்கள் கலந்து கொள்வர் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate