வெள்ளி, 5 ஜூன், 2015

வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளித்தி பொருவிழா

(மூலையுரான்)

கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள்  ஒன்றான  மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவமானது கடந்த 28.05.2015 அன்று திருக்கதவு  திறத்தலுடன் ஆரம்பமாகி 01.06.2015 அன்று திருக்குளித்தி ஆடுதலுடன் இனிதே நிறைவேறியது.

இதில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அம்பாளின் திருவருள் பெறும் அடியவர்கள் பல்வேறுபட்ட இடங்களில் இருந்தும் இன்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இறுதி நாளான 01.06.2015 அன்று பக்தர்கள் மடப்பெட்டி எடுக்கும் வைபவம் மற்றும் பொங்கல் இடுதல் போன்ற நேற்றிக்கடன்களும் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இறுதிநாள் உற்சவத்தில் பி.ப 3.00 மணியளவில் அம்பாளின்  பூஜைகள் ஆரம்பமாகி உடுக்குச்சிந்து மற்றும் காவியங்கள் பாடப்பட்டு திருக்குளித்தி ஆடப்பட்டு திருச்சடங்கு இனிதே நிறைவுபெற்றது.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate