திங்கள், 20 ஜூலை, 2015

மட்டக்களப்பு மைந்தர்களின் தயாரிப்பில் உருவான "நான்கலைஞன்" குறும்படம் வெளியீடு



(வாஞ்சி ஒலி)மட்டு நகர் இளைஞர்களின் தயாரிப்பில் "நான் கலைஞன்" என்ற குறும்படத்தின் காட்சிகள் பரீட்சாத்தமாக தற்போது எம் மண்ணின் ரசிகர்களின் பார்வைக்காக விடப்பட்டுள்ளது.

குறும்படத்தில் நட்சத்திரங்களாக கிரேசியன் , கிறவுன்சன், டினோச், அஜிந்திரபிரசாந், ரேமி மற்றும் சிறிதரன் ஆசிரியர் , இலங்கையின் wave நடன இயக்குனர் கிரிஸ்னகாந்தன் ஆகியோர் ஜொலிக்கின்ற அதேய வேளை படத்தினுடைய பிண்னணி இசையினை இளைஞன் ஜேசு அவர்களும் கதை வசனம் மற்றும் இயக்கத்தினை வளர்ந்து வரும் முன்னணி இயக்குனர் சுரேன் யூட் அன்டனும் திறம்பட உருவாக்கியுள்ளனர் அத்துடன் இவருடைய 3வது குறுந்திரைப்படமாக இப்படம் வெளிவருகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும் மற்றும் விசேடமாக இக் குறும்படத்தின் படத்தொகுப்பை கிறேசன் பிரசாந் அவர்கள் அருமையாகச் செய்துள்ளார்.

இவ் குறும்படங்கள் வெகு விரைவில் பாரிய பிரம்மாண்டமான அரங்கில் வெளியீட்டு வைக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும். "நான் கலைஞன்" எனும் பெயரில் வெளிவரவுள்ள இப் படம் அனைத்து உலக கலைஞர்கள் பெரிதும் எதிர்பார்க்கபடுகின்ற குறும்படமாக வருவதற்கும் சிறந்த வெற்றி குறும்படமாக மிளிர  மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.





div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate