ஞாயிறு, 12 ஜூலை, 2015

பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தில் நடைபெற்ற மலேரியா கருத்தரங்கு

(நித்தி) 

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தின் சுகாதார கழக ஏற்பாட்டில் நடைபெற்ற மலேரியா நோய் பற்றிய கருத்தரங்கு மற்றும் பாதுகாப்புக்காக நுளம்பு வலை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் 2 மணியளவில் பாடசாலையின் அதிபர் தெ.டினேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது.

இதன்போது மாணவர்களுக்கு மலேரியா சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகள் அத்துடன் வழிகாட்டல் செயற்பாடுகளை மட்டக்களப்பு பிராந்திய மலேரிய தடுப்பு அதிகாரி வைத்தியர் திருமதி மேகலா ரவிச்சந்திரன் அவர்களினால் நடாத்தப்பட்டது.

நடைபெற்ற நிகழ்வுக்கு பொது சுகாதார வெளிக்கள உத்தியோகர்த்தர்கள் மு.ஜனனன், எஸ்.அன்புராஜ் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் பல்வேறுபட்ட இடங்களில் மலேரியா தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் பாதுகாப்பு வழிகாட்டல்கள் நடைபெற்றுவருகின்றபோதும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவ சமூதாயங்கள் அவற்றை உரியமுறையில் நடைமுறைப்படுத்தும்போது மலேரியா அற்ற மாவட்டமாக கொண்டு வரமுடியுமென்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate