மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பொலிஸ் பிரிவுகளில் இரு ஆண்களின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீச்சான்பள்ளம் கிராமத்திலுள்ள வெற்றுக் காணியொன்றுக்குள் இருந்து, நேற்று சனிக்கிழமை மாலை ஆணின் சடலமொன்றை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை கீச்சான் பள்ளம் கிராமத்திலுள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றுக்குள் சடலமொன்று கிடப்பதாக காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், அந்த சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் காங்கேயனோடையைச் சேர்ந்த எம்.நஜிமுதீன்(44) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் கூறினர்.
குறித்த நபர் நேற்றிரவு தனது வீட்டுக்கு செல்லாததால் அவரை அவரின் குடும்பத்தினர் தேடியதாகவும் இந் நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சடலம் நீதிவான் நீதமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் வெள்ளைப்பாலத்துக்கு அருகில் மட்டக்களப்பு வாவியினுல் இருந்து 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் கிழ் குறித்த மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீச்சான்பள்ளம் கிராமத்திலுள்ள வெற்றுக் காணியொன்றுக்குள் இருந்து, நேற்று சனிக்கிழமை மாலை ஆணின் சடலமொன்றை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை கீச்சான் பள்ளம் கிராமத்திலுள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றுக்குள் சடலமொன்று கிடப்பதாக காத்தான்குடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், அந்த சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் காங்கேயனோடையைச் சேர்ந்த எம்.நஜிமுதீன்(44) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் கூறினர்.
குறித்த நபர் நேற்றிரவு தனது வீட்டுக்கு செல்லாததால் அவரை அவரின் குடும்பத்தினர் தேடியதாகவும் இந் நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சடலம் நீதிவான் நீதமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு நகரில் வெள்ளைப்பாலத்துக்கு அருகில் மட்டக்களப்பு வாவியினுல் இருந்து 60வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு வாவியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலின் கிழ் குறித்த மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக