திங்கள், 13 ஜூலை, 2015

சித்தாண்டி உதைப்பந்தாட்ட சவால் கிண்ணம் 2015 - இறுதி நாள் நிகழ்வு

(நித்தி)

சித்தாண்டி உதைப்பந்தாட்ட சவால் கிண்ணம் 2015ம் ஆண்டுக்கான இறுதி சுற்றுடன் இன்று (12) ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்துள்ளது. சித்தாண்டி வானவில் விளையாட்டுக்கழகம் நடாத்திய சித்தாண்டி உதைப்பந்தாட்ட சவால் கிண்ணமானது கடந்த வாரத்தில் ஆரம்பமாகி லீக் முறை அடிப்படையில் நான்கு அணிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

சித்தாண்டி உதை பந்தாட்டத்தை மேம்படுத்தும் வகையில் அணிகளுக்கிடையிலான போட்டியானது விறுவிறுப்பாகவும் அணிகளுக்கிடையே போட்டி மிக்கதாகவும் ரசியர்களை உள்ளவாங்க கூடியவகையில் ஒழுங்கமைப்பு மற்றும் ஏற்பாடுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றமை கூட்டிக்காட்டத்தக்கது.


நடைபெற்ற சித்தாண்டி உதைபந்தாட்ட சால் கிண்ணத்துக்காக சித்தாண்டி -1, சித்தாண்டி – 2, சித்தாண்டி – 3, சித்தாண்டி – 4 என பாரிய நிலப்பரப்பையும் அதிகளவான மக்கள் தொகையையும் உடைய சித்தாண்டி நான்கு கிராம சேவகர் பிரிவுகளிலும் உள்ள நான்கும் சவால் மிக்க அணிகளும் பங்குபற்றின.


அதனடிப்படையில் இன்று மாலை நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கு சித்தாண்டி -3, சித்தாண்டி -4 அணிகள் தெரிவாகி நடைபெற்றபோட்டியில் சித்தாண்டி – 4 இரண்டு கோல்கள் அடித்து முதலிடத்தை பெற்றதுடன் சித்தாண்டி -3 அணியினர் இறுதிச் சுற்றில் எவ்வித கோல்களும் அடிக்கவில்லை அதனால் நடைபெற்று வந்த போட்டி அடிப்படையில் சித்தாண்டி – 3 இரண்டாம் இடத்தை பெற்றதுடன் மூன்றாவது இடத்தை சித்தாண்டி – 1 இடம் பிடித்து,  நான்கம் இடத்தை சித்தாண்டி – 4 அணியினர் பெற்றுக்கொண்டனர்.


இடம்பெற்ற உதைப்பந்தாட்டப் போட்டிக்கு சித்தாண்டியை பிறப்பிடமாக கொண்ட நல்ல உள்ளங்கள் பெறுமதி மிக்க வெற்றிக் கிண்ணங்களை அன்பளிப்பாக வழங்கிவைத்தனர். அதன்படி அமரர் செல்லையா தேவராஜா குடும்பம், அமரர் சீனித்தம்பி அழகையா குடும்பம், அமரர் சுப்புரமணியம் குணநாயகம் குடும்பம், அமரர் சின்னத்துரை பேரின்பம் குடும்பம் என நான்கு குடும்பங்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.


நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்குரிய வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்ததுடன் பெறுமதி மிக்க வெற்றிக்கிண்ணங்களை அன்பளிப்பாக வழங்கிய நல்ல உள்ளம்கொண்ட குடும்பத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் அமரத்துவமடைந்த ஆத்மாக்களுக்கும் நல்லாசிகிடைக்க வேண்டினர்.


சித்தாண்டி உதை பந்தாட்ட சவால் கிண்ணம் 2015 க்குரிய இறுதி சுற்றில் அதிகமான கோல்களாக இரண்டு கோல்களை அடித்து  சித்தாண்டி – 4 அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டுசென்ற வீரர் கிஸ்ணப்பிள்ளை குலதீபன் அவர்களுக்கு மேன் ஒப் த கிண்ணம் வழங்கப்பட்டது.நடைபெற்ற போட்டிக்கு நடுவராக சத்தியவரதன் ஆசிரியர் கடமையாற்றினர்.


சித்தாண்டி உதை பந்தாட்ட சவால் கிண்ணம் 2015ம் ஆண்டுக்குரிய இறுதி நிகழ்வுக்கு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் க.பகீரதன் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.மட்டக்களப்பு மாவட்டத்திலே உதைப்பந்தாட்ட போட்டியில் ஜம்பவண்ணாக திகழ்ந்த சித்தாண்டி பிரதேச உதைப்பந்தாட்ட அணியானது சிறப்பான அணிகளை சித்தாண்டி பிரதேசத்திலுள்ள நான்கு பிரிவுகளிலும் இருந்து உருவாக்கி தற்பொழுது பாரிய அணியாகவும் மாவட்டத்தில் இருக்கின்ற அணியுடன் சவால்விடக்கூடிய அணியாக தற்பொழுது காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate