(கலைச்செல்வன்)
மட்டு நகரின் வடக்கே அமைந்துள்ள முறக்கொட்டான்சேனை ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் 21வது வருடாந்த அலங்கார உற்சவ திருச்சடங்கு எதிர்வரும் திங்கள் கிழமை (27) ஆரம்பமாகவுள்ளது.
அன்னையவளின் ஆலயத்தின் முதல் நாளன்று தெய்வீக சித்தம் கூடிய சுப வேளையில் பிற்பகல் 4.30 மணிக்கு விநாயக பெருமானுக்கு விடேச அபிசேக ஆராதனை இடம்பெற்றதும் திருக்கும்பம் எழுந்தருளச் செய்து 21வது ஆண்டுக்கான வருடாந்த திருச்சடங்குக்குரிய திருக்கதவு திறந்தலுடன் ஆரம்பமாக இருக்கின்றது.
ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது ஐந்து உற்சவங்களை கொண்டது.
நடைபெறயிருக்கும் உற்சவ காலங்களில் ஒவ்வொரு நாட்களும் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறயிருக்கின்றது.நடைபெறயிருக்கும் ஆலயத்தின் உற்சவத்தின் இறுதி நாளாகிய வெள்ளிக்கிழமை (31) திரௌபதை அம்மன் திருமணம், தீ மிதிப்பு, குளிர்த்தில் பாடுதல் என்பவற்றுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முறக்கொட்டான்சேனை தேவாபுரம் ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் உற்சவ காலங்களில் அடியார்கள் பக்தி சிரத்தையுடன் ஆலயத்தில் நடைபெறயிருக்கின்ற பூசை நிகழ்வுகளில் கலந்துகொண்டு அன்னையவளின் அருட்கடாச்சம் பெற்றுச்செல்லுமாறு ஆலய இறைபணியிலுள்ள நிருவாகத்தினர் அன்பாக அழைக்கின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக