திங்கள், 13 ஜூலை, 2015

ஜனநாயக கட்சியின் மட்டு மாவட்ட தலைமை வேட்பாளராக ஸாபி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீல்ட் மாசல் சரத் பொன்சேகாவின் கட்சியான ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஸாபி போட்டியிடுகின்றார். 

இக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு மாநகர முன்னாள் மேயரும் அக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான சிவகீதா பிரபாகரன் தலைமை வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அவர் பின் வாங்கிவிட்டார் என தெரியவருகின்றது. 

இந்த நிலையில் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.ஸாபி தலைமை வேட்பாளராக கொண்டு போட்டியிடும் இந்த அணியில் தமிழ், முஸ்லிம், சிங்கள வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இவர்கள் சனிக்கிழமை (11) வேட்புமனுப் பத்திரத்தில் கையொப்பமிட்டுள்ளனர். 
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate