செவ்வாய், 14 ஜூலை, 2015

தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலை விளையாட்டு விழா

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று 14.07.2015 (செவ்வாய்க்கிழமை) பி.ப 02.00 மணியளவில் பாலர் பாடசாலையின் தலைவர் தலைமையில் ஆரம்பமானது.


இவ் விளையாட்டு விழாவிற்கு பிரமத அதிதியாக கலாநிதி மூ.கோபாலரெதத்தினம்(பிரதேச செயலாளர் மண்முனை தென் எருவில் பற்று) மற்றும் சிறப்பு அதிதிகளாக என்.புவனசுந்தரம்(உதவி கல்வி பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம்) மற்றும் காமினி இன்பராஜன்(கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மண்முனை தென் எருவில் பற்று) ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இவ் விளையாட்டு விழாவின் பொது பாலர் பாடசாலை மாணவமாணவிகளின் அணிநடை , உடற்பயிற்சி கண்காட்சி,தாரா நடை,சிறட்டையில் நடத்தல்,பழம் போடுதல் போன்ற பல விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கலந்து சிறப்பித்த மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.










Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624955

Translate