(கிரான் விஜிகரன்) யாழ் - நாமும் இணைவோம் நிறுவகத்தின் உதவியில் மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட பரங்கியாமடு பாராதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (20) திங்கள் கிழமை வித்தியாலயத்தின் அதிபர் சுப்புரமணியம் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்கப்பட்ட பராங்கியாமடு கிராமம் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்றது. இக் கிராமத்தில் சுமார் 120க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதுடன் அதிகமான குடும்பங்கள் கடல் தொழிலை கூலிக்குத் தொழிலாக கொண்ட குறைந்த வாழ்வாதராத்தைக் பெறும் அடிப்படை வசதிகள் குறைவாகவுள்ள கிராமமாக காணப்படுகின்றது.
அன்றாடம் கூலித்தொழிலை எதிர்பார்த்து குடும்பம் நடாத்தும் இக்கிராமத்தில்; பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறைவாக காணப்படுவதாகவும் அத்துடன்; குறித்த கிராமத்தில் இதுவரைக்கும் உயர்தரம் படித்து ஓரிரு மாணவர்கள் மாத்திரம் உள்ளாதகவும் பல்வேறு கஸ்டத்தின் மத்தியில் குடும்பங்கள் தங்களது வாழ்வாரதரத்தை நடாத்திவருவதாகவும் தெரிவித்தனர்.
நாமும் இணைவோம் நிறுவகத்தின் உதவியினால் மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கி வைக்கும் நிகழ்வுக்கு நிறுவகத்தின் உத்தியோகத்தர்களான எம்.நஜந்தன், ரி.புருசோத்மன், என்.நிஜாந்தன், வி.கோகுலன் அத்துடன் கல்குடா கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) தினகரன் ரவி, கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், அயல் பாடசாலையின் அதிபர் ம.ரவிந்திரன் மற்றும் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட அதிபர் கருத்து தெரிவிக்கையில்;குறித்த கிராமத்தில் கல்வி மட்டம், வாழ்வாதார பொருளாதார வசதி, அடிப்படை வசதி என்பன குறைவாக காணப்படுவதும் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையை யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் நாமும் இணைவோம் என்ற நிறுவனத்தினர் தெரிவுசெய்தமை மற்றும் மாணவர்களுக்கான பாடசாலை புத்தக பை மற்றும் பாடசாலை உபகரணங்களை முன்வந்து வழங்கி வைத்தமைக்கு நாம் இணைவோம் நிறுவகத்தினருக்கு எனது பாடசாலை மற்றும் கிராம மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட பிரதிக்கல்வி பணிப்பாளர் கருத்த தெரிவிக்கையில்;நாமும் இணைவோம் அமைப்பின் 'கல்விக்காய் ஏங்கும் கனவிற்கு விழியாய் நாமும் இணைவோம்' என்ற தொனிப் பொருளுக்கு ஏற்ப கல்விற்கு ஏற்கும் மாணவர்களின் கல்விசார் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருக்கும் நாமும் இணைவோம் அமைப்பினருக்கும் கல்விச் சிறுவர்களுக்கு இவ்வாறான உதவிகளை வழங்கிவரும் எமது உறவுகளான புலம்பெயர் நன்கொடையாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான வறிய மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு உங்களைப் போன்றவர்களின் உதவிகள் எதிர்வரும் காலங்களிலும் கிடைக்கும் பட்சத்தில் எமது தமிழ் கல்விச் சமுகத்தின் வளர்ச்சியை மேன்மேலும் அதிகரித்துக்கொள்ள வாய்ப்பாக இருக்குமென குறிப்பிட்டதுடன் வடக்கில் இருந்து கிழக்கு மாணவர்களின் கஸ்ட நிலையை அறிந்து வெகுதூரம் இருந்துகொண்டு எங்களது வலயத்திலுள்ள மாணவர்களின் கல்வி நிலை பற்றி அறிந்து அவர்களுக்கான தேவையை அறிந்து உதவி செய்யமுன்வந்தமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என மேலும் தெரிவித்தார்.
இதன்போது பாடசாலையில் கல்வி கற்கும் 59 மாணவர்களுக்குமான கற்றல் உபகரணங்களை வருகைதந்த அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக