ஞாயிறு, 26 ஜூலை, 2015

மீன் பிடிப்­ப­டகின் வெளி­யிணை இழுவை இயந்­திரம் திருட்டு (ஏறாவூர் – சவுக்­கடி கடற்­க­ரையில் சம்­பவம் )

ஆழ் கடல் மீன்­பிடிப் படகின் வெளி­யி ணை இயந்­தி­ர­மொன்று திரு­டப்­பட்­டுள்­ள­தாக முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். 
இச்­சம்­பவம் பற்றித் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஏறாவூர்- சவுக்­கடிக் கடற்­க­ரையில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த ஆழ்கடல் மீன்­பி­டியில் ஈடு­படும் பட­கொன்றின் வெளி­யிணை இழு வை இயந்­திரம் திரு­டப்­பட்­டுள்­ளது. வழ­மை­போன்று புதன்­கி­ழமை ஆழ்­கடல் மீன்­பி­டியில் ஈடு­பட்டு விட்டு படகைக் கரை­யொ­துக்கி நிறுத்தி வைத்­தி­ருந்த சம­யத்­தி­லேயே இந்தத் திருட்டு இடம்­பெற்­றுள்­ளது. படகின் உரி­மை­யா­ள­ரான சவுக்­கடி வீதி யைச் சேர்ந்த சதா­சிவம் ராமச்­சந்­திரன் என்­பவர் வியா­ழக்­கி­ழமை பகல் படகைப் பார்த்­த­போது படகின் வெளி­யிணை இழுவை இயந்­திரம் அகற்­றப்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. திரு­டப்­பட்­டுள்ள இந்த இயந்­தி­ரத்தின் பெறு­மதி சுமார் 2 இலட்­சத்து 78 ஆயிரம் ரூபாய் என மதிப்­பி­டப்­ப­டு­வ­தாக முறை­யி­டப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே பல குற்றச் செயல்­க­ளுக்­காக சிறை சென்று திரும்­பிய ஒரு நபரே படகின் இயந்­தி­ரத்தைத் திருடி விற்­றி­ருப்­பது தெரி யவந்திருப்பதாக படகின் உரிமையாளர் முறையிட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டுள்ளனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate