ஆழ் கடல் மீன்பிடிப் படகின் வெளியி ணை இயந்திரமொன்று திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஏறாவூர்- சவுக்கடிக் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகொன்றின் வெளியிணை இழு வை இயந்திரம் திருடப்பட்டுள்ளது. வழமைபோன்று புதன்கிழமை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டு விட்டு படகைக் கரையொதுக்கி நிறுத்தி வைத்திருந்த சமயத்திலேயே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது. படகின் உரிமையாளரான சவுக்கடி வீதி யைச் சேர்ந்த சதாசிவம் ராமச்சந்திரன் என்பவர் வியாழக்கிழமை பகல் படகைப் பார்த்தபோது படகின் வெளியிணை இழுவை இயந்திரம் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் பெறுமதி சுமார் 2 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல குற்றச் செயல்களுக்காக சிறை சென்று திரும்பிய ஒரு நபரே படகின் இயந்திரத்தைத் திருடி விற்றிருப்பது தெரி யவந்திருப்பதாக படகின் உரிமையாளர் முறையிட்டுள்ளார். இது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை யில் ஈடுபட்டுள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக