(ரவி)
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏறாவூர்ப்பற்று கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கஸ்டப்பிரதேச பாடசாலையான மட்- ஐயன்கேணி தமிழ் வித்தியாலய வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு நோர்வே தமிழர் உதவி அமைப்பு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைத்துள்ளது.
இதனை மாணவர்களுக்கு வழங்குவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.மனோகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கே.சத்தியசேகர், கலாநிதி பத்திநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வறுமையான மாணவர்களில் தூர பகுதிகளில் இருந்துவரும் மாணவர்கள் தமது கல்வியை தடையின்றி கொண்டுசெல்லும் வகையில் இந்த துவிச்சக்கர வண்டிகளை நோர்வே தமிழர் உதவி அமைப்பு வழங்கியுள்ளது.
இதேவேளை பாடசாலை மீதும் பாடசாலையின் செயற்பாடுகள் மீதும் மிகவும் அக்கரைகொண்ட குறித்த பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் உடைந்த மாணவர் கதிரை கதிரைகள் திருத்தும் பணிகளையும் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களை பாராட்டினார்.
பல பாடசாலைகளில் உடைந்த கதிரைகளை ஒதுக்கிவிட்டு புதிய கதிரைகள் பெறுவதற்காக முயன்றுவரும் நிலையில் தமது வளங்களை வீண்விரயம் செய்யாமல் அவற்றினை திருத்தி பாவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குறித்த பாடசாலை சமூகத்தின் செயற்பாடுகள் ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏறாவூர்ப்பற்று கல்விக் கோட்டத்திற்குட்பட்ட கஸ்டப்பிரதேச பாடசாலையான மட்- ஐயன்கேணி தமிழ் வித்தியாலய வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு நோர்வே தமிழர் உதவி அமைப்பு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைத்துள்ளது.
இதனை மாணவர்களுக்கு வழங்குவைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.மனோகரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கே.சத்தியசேகர், கலாநிதி பத்திநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வறுமையான மாணவர்களில் தூர பகுதிகளில் இருந்துவரும் மாணவர்கள் தமது கல்வியை தடையின்றி கொண்டுசெல்லும் வகையில் இந்த துவிச்சக்கர வண்டிகளை நோர்வே தமிழர் உதவி அமைப்பு வழங்கியுள்ளது.
இதேவேளை பாடசாலை மீதும் பாடசாலையின் செயற்பாடுகள் மீதும் மிகவும் அக்கரைகொண்ட குறித்த பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் உடைந்த மாணவர் கதிரை கதிரைகள் திருத்தும் பணிகளையும் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களை பாராட்டினார்.
பல பாடசாலைகளில் உடைந்த கதிரைகளை ஒதுக்கிவிட்டு புதிய கதிரைகள் பெறுவதற்காக முயன்றுவரும் நிலையில் தமது வளங்களை வீண்விரயம் செய்யாமல் அவற்றினை திருத்தி பாவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குறித்த பாடசாலை சமூகத்தின் செயற்பாடுகள் ஏனைய பாடசாலைகளுக்கு ஒரு முன்னுதாரணமாகும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக