வியாழன், 9 ஜூலை, 2015

மட்டக்களப்பு- த.தே.கூ வின் எட்டாவது வேட்பாளர் தெரிவானார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிடும் எட்டாவது நபராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஜீ.சௌந்தரராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர், ஈரோஸ் அமைப்பின் சார்பில் கடந்த 89ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது தெரிவானது, கிறிஸ்தவ மக்கள் சார்பிலும், மட்டக்களப்பு தொகுதி சார்பிலும் அமைந்திருக்கிறது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா(தலைமை வேட்பாளர்), பா.அரியநேத்திரன், ரெலோ சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்பு தொகுதியைப்பிரதிநிதித்துவப்படுத்தி ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஜீ.சௌந்தரராஜன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அதே நேரம், கல்குடா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழரசுக்கட்சி சார்பாக சீ.யோகேஸ்வரன்,  புளோட் சார்பாக ஆசிரியர் ச.வியாளேந்திரன் (அமல்) ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.

அதன்படி பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு தொகுதிக்கு தலா 3பேரும் கல்குடா தொகுதிக்கு இருவரும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624948

Translate