புதன், 29 ஜூலை, 2015

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான இலவசக் கல்வி கருத்தரங்கு

(கிரான் விஜிகரன்) கிழக்குப் பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கா.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களை தயார் செய்யும் நோக்கோடு பல்கலைக்கழக லயன்ஸ் கழகத்தினால்; கல்வி கருத்தரங்கானது 21, 22ம் தினங்களில் கிழக்குப்பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.


இதன் வளவாளர்களாக தமிழ் துறை பேராசிரியர் எஸ்.யோகராஜா, இந்த நாகரீகத் துறை தலைவி திருமதி சாந்தி கேசவன், சிரேஸ்ட விரிவுரையாளர் எஸ்.முகுந்தன், விரிவுரையாளர் வாமன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான துறை சிரேஸ்ட விரிவுரையாளர் யோகராஜா, அளவையியலும் விஞ்ஞானமுறை துறை தலைவர் மு ரவி, சிரேஸ்ட விரிவுரையாளர் சோ ஜெகநாதன், உதவி விரிவுரையாளர் பிரபாகரன் ஆகியோர் தமது பாரிய பங்களிப்ப்pனை வழங்கினர்.


இதன் ஆரம்ப நிகழ்வானது கிழக்குப்பல்கலைக்கழக லயன் தலைவர் மாசிலாமணி அமிர்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இன்நிகழ்வின் பிரதம அதிதியாக  சர்வதேச லயன் கழக 306 C2 மாவட்டத்தின் ஆளுனர் சபையின் செயலாளர் லயன் Dr. செல்வேந்திரன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக கல்குடா வலக கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா, சர்வதேச லயன் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய தலைவரும், கிழக்குப்பல்கலைக்கழக தாவரவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளருமான லயன் கலாநிதி சந்திராகாந்தா மகேந்திரநாதன் லயன் கழக வலைய தலைவர்கள் லயன் ஜெயக்குமார் லயன் ராஜகோபால், மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் மற்றும் கிழக்குப்பல்கலைக்கழக லயன் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


மேற்படி கல்விக்கருத்தரங்கானது தமக்கு மிகவும் பயனள்ளதாகவும் குறிப்பாக தம்மை பரீட்சைக்கு தயார் படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் இக்கருத்தரங்கில் பங்கு கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர். அத்துடன் இவ்வாறான கருத்தரங்குகளை தொடர்ந்து நடாத்தி தமது வலயத்தின் கல்வி மேன்பாட்டுக்கு உதவுமாறு வலைய கல்விப்பணிப்பாளர் தமது சிறப்பு அதிதி உரையில் தெரிவித்தார்.




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate