வெள்ளி, 10 ஜூலை, 2015

தேற்றாத்தீவில் இடம் பெற்ற சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி கூட்டம்


களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு கிராமத்தில் இன்று(10.07.2015) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறுவர் மேற்பாட்டு உத்தயோகத்தரின் ஏற்பாட்டில்  சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி கூட்டம் இடம் பெற்றது.








இவ் அபிவிருத்தி கூட்டத்திற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாயர் கலாதிநி எம். கோபாலரெத்தினம் அவர்கள் விசேட அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகப்பு தொடர்பான விழிவுணர்வு கருத்துக்களை பொது மக்களுக்கு தெளிவூட்டினார் மேலும் தேற்றாத்தீவு கிராமத்தில் கடமையாற்றும் கிராம சேவகர்கள் சமூர்தி உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி கூட்டத்திற்கு அனுசரணை வழங்கிய சர்வோதய உத்தியோகர்தரும் கலந்து கொண்டதுடன் தேற்றாத்தீவு கிராம பொது மக்களும் பங்கு பற்றினர்.


சிறுவர் பாதுகாப்பு தொடர்பான அபிவிருத்தி கூட்டத்தில் தேற்றாத்தீவு கிராமத்தில் உள்ள நான்கு கிராம சேவகர்கள் பிரிவுகளிலும் சிறுவர் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு அதன் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624983

Translate