ஞாயிறு, 12 ஜூலை, 2015

வெற்றிலையில் களம் இறங்குகிறது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இன்று கிரானில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குல்டா தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் ஜோர்ஜ் பிள்ளையும் மற்றும் புன்னைச்சோலையை சேர்ந்த ஒருவரும் போட்டியிடவுள்ளதுடன் பட்டிருப்பில் இராசமாணிக்கம் சாணக்கியனும் பெரியபோரதீவை சேர்ந்த ஒருவரும்போட்டியிடவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624965

Translate