சனி, 11 ஜூலை, 2015

பிரியாவிடை நிகழ்வில் சிவானந்தா தேசிய பாடசாலை மண்டப ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு

மட்டக்களப்பு   சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் மது அருந்திய உயர்தர வகுப்பு மாணவர்களால் பாடசாலை மண்டப ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட் சிவானந்தா தேசிய பாடசாலையில் க.தொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கின்ற மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வின்போது மது அருந்திய சில மாணவர்களால் பாடசாலை மண்டப ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு ஜன்னல்களை உடைத்த மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் மனோராஜ் தெரிவித்தார்.
இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பொலிசாரின் அறிவுறுத்தலுக்கமைவாக பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை எனவும் பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்தார்.sivananda collige
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate