மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் மது அருந்திய உயர்தர வகுப்பு மாணவர்களால் பாடசாலை மண்டப ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட் சிவானந்தா தேசிய பாடசாலையில் க.தொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்ற இருக்கின்ற மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வின்போது மது அருந்திய சில மாணவர்களால் பாடசாலை மண்டப ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு ஜன்னல்களை உடைத்த மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக காத்தான்குடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பாடசாலையின் அதிபர் மனோராஜ் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக