அத்தியாவசிய பொருட்களின் விலை எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
‘பிரதமரின் அறிவுறுத்தலுக்கேற்ப லக் சதொசவில் அரிசியின் விலை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் சம்பா பொன்னி அரிசி 69 ரூபாய்க்கும், வெள்ளை நாடு அரிசி 60 ரூபாய்க்கும் விற்கப்படும்.
‘பிரதமரின் அறிவுறுத்தலுக்கேற்ப லக் சதொசவில் அரிசியின் விலை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் குறைக்கப்படவுள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் சம்பா பொன்னி அரிசி 69 ரூபாய்க்கும், வெள்ளை நாடு அரிசி 60 ரூபாய்க்கும் விற்கப்படும்.
அத்துடன் உடனடியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும். மேலும், ஆறு வருடங்களாக கொடுக்கப்படாது தடைப்பட்டிருந்த 2 ஆயிரத்து 100 கோடி ஓய்வூதியத் தொகையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதிக்குள் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்றும் கூறினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக