தமிழ் தேசியத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அதேவேளை இளைஞர் யுவதிகளில் கல்வியை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரன் (எஸ்.எஸ்.அமல்) தெரிவித்தார்.
இன்று மாவட்ட செயலகத்தில் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வு நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு அளிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவான இளைஞர் யுவதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரனுக்கு (எஸ்.எஸ்.அமல்) தங்களது ஆதரவினை வெளிப்படுத்தினர்.
இதன்போது உரையாற்றிய அவர்,
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கல்விச்சமூகத்தில் இளம் சமூகத்தினை சேர்ந்த எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இளைஞர்களுக்கான இந்த வாய்ப்பினை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்.
நாங்கள் தமிழ் தேசியம் என்னும் கொள்கையில் இருந்து இன்றுவரை அதில் இருந்து விலகாத நிலையிலேயே இருந்துவருகின்றோம். தமிழ் தேசியத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அதேவேளை எமக்கு பின்னால் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சரியான கல்வி வாய்ப்பினை வழங்கி வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தவேண்டும்.
அதற்காக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுஅவர்களின் வளர்ச்சியாக நூறுவீதம் பணியாற்றுவேன்.
இன்று மாவட்ட செயலகத்தில் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்வு நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்தில் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு அமோக ஆதரவு அளிக்கப்பட்டது.
இதன்போது பெருமளவான இளைஞர் யுவதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்குடா தொகுதியின் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள பிரபல ஆசிரியர் சதாசிவம் வியாளேந்திரனுக்கு (எஸ்.எஸ்.அமல்) தங்களது ஆதரவினை வெளிப்படுத்தினர்.
இதன்போது உரையாற்றிய அவர்,
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கல்விச்சமூகத்தில் இளம் சமூகத்தினை சேர்ந்த எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இளைஞர்களுக்கான இந்த வாய்ப்பினை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும்.
நாங்கள் தமிழ் தேசியம் என்னும் கொள்கையில் இருந்து இன்றுவரை அதில் இருந்து விலகாத நிலையிலேயே இருந்துவருகின்றோம். தமிழ் தேசியத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுப்புகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அதேவேளை எமக்கு பின்னால் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு சரியான கல்வி வாய்ப்பினை வழங்கி வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்தவேண்டும்.
அதற்காக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுஅவர்களின் வளர்ச்சியாக நூறுவீதம் பணியாற்றுவேன்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக