வெள்ளி, 10 ஜூலை, 2015

மட்டக்களப்பு உட்பட 5 தேர்தல் மாவட்டங்களில் இன்று தமிழ் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றையதினம் (வெள்ளிக்கிழமை) வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு வேட்புமனுக்கள் கூட்டமைப்பினரால் கையளிக்கப்படவுள்ளன.


கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இன்று வேட்புமனுக்கள் கையளிக்கப்படவுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசன ஒதுக்கீடு வவுனியா கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மாவை சேனாதிராஜா முதன்மை வேட்பாளராகவும், வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் முதன்மை வேட்பாளராகவும், திருகோணமலை மாவட்டத்தில் இரா.சம்பந்தன் முதன்மை வேட்பாளராகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா முதன்மை வேட்பாளராகவும், அம்பாறை மாவட்டத்தில் ஹென்றி மகேந்திரன் முதன்மை வேட்பாளராகவும் களமிறங்கவுள்ளனர்.

அதேநேரம், யாழ் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி உள்ளிட்ட மேலும் சில கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் இன்றைய தினம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624834

Translate