செவ்வாய், 28 ஜூலை, 2015

மாமாங்கத்தில் முச்சக்கர வண்டி இனந்தெரியாதோரால் தீக்கிரை

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் உள்ள வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.


மாமாங்கம் இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள சு.பாலச்சந்திரன் என்பவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 11.00மணிளவில் வீட்டுக்கு முன்பாக ஒளி தெரிவதைக்கண்டு வெளியில் வந்து பார்த்தபோது முச்சக்கர வண்டி எரிந்துகொண்டிருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டி தானாக எரிய சந்தர்ப்பம் இல்லையெனவும் யாரோ இந்த சதியை செய்திருக்கவேண்டும் எனவும் முச்சக்கர வண்டியின் உரிமையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து ஸ்த்தலத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.




Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate