திங்கள், 27 ஜூலை, 2015

குகனேசன் உள்ளிட்ட 8 பேரின் படுகொலையுடன் தொடர்புபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி

2004.07.2015ம் திகதி கொட்டாவையில் நித்திரைத் தூக்கத்தில் வைத்துபடுகொலைசெய்யப்பட்டதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் குகனேசன் உள்ளிட்ட 08 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.


இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உருவாக்கத்திற்காக விதையாக இருந்த எமதுபோராளிகள் கொழும்பில் வைத்து படுகொலைசெய்யப்பட்ட 15வது ஆண்டுநினைவை நாம் கணத்த இதயத்துடன் நினைவு கூறுகின்றோம்.

இதன் முதன்மைப் போராளியாகவும், இவ்வுருவாக்கத்திற்கு ஆரம்பவித்தாக அமைந்த குகநேசன் உட்பட ஏனைய எம் பெருமதிமிக்க போராளிகள் இந்நாளில்தான் (25.07.2015)மிகவும் நயவஞ்சகமான முறையில் தண்டிக்கப்பட்டுகொல்லப்படனர்.

அவர்கள் சுமந்திருந்த இலட்சியம்,கனவுகளின் விதையாக பெருவிருட்சமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாக நாம் வளர்ந்திருக்கின்றோம். இந்த உருவாக்கத்திற்கு நாம் அடைகின்ற ஒவ்வொரு வெற்றிகளில் நாம் அடைந்திருக்கின்ற வெற்றிப் படிகளின் முழு முதற் காரணக் கர்த்தாக்கள் அவர்கள் தான்.

அவர்களை நினைவூட்டும் இத் தருணத்தில் நாங்கள் மிகமுக்கியமானவிடயம் ஒன்றைசுட்டிக் காட்டவிரும்பிகின்றோம். இன்று பல அரசியல் படுகொலைகள் தொடர்பான விpசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதுவரவேற்கப்படவேண்டியதும் கூட. சட்டத்தின் முன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எவ்விதமாற்றுக் கருத்துக்களும் எமக்கு இல்லை.

அதேபோன்று ஜனநாயக வழியில் நம்பிக்கைகொண்டு பயங்கரவாதத்தை எதிர்த்துதம் சமூகமக்களின் விடிவுக்காக திரும்பியிருந்த இப்போராளிகளின் படுகொலையும் சந்தேகமற்ற ஓர் அரசியல் படுகொலைதான்.

எனவேயுத்தம் முடிவுக்குகொண்டுவரப்பட்டுபுலிகள் தோற்கடிக்கப்பட்டநிலையில் இந்தபடுகொலையின் உண்மையாக சூத்திரதாரியார்? இந்தபடுகொலையை புலிகள் மேற்கொள்வதற்கு அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யார்.அவர்களின் யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த அந்தகாலப் பகுதியில் புலிகளைஆயுதங்களுடன் கொழும்புக்கு அழைத்துவந்த முன்னாள், இந்நாள் பாராளுமன்றஉறுப்பினர்கள் யார்? அமைச்சர்கள் யார்? முகவர்கள் யார்? என்ற அனைத்து உண்மைகளும் விசாரிக்கப்பட்டு வெளிக்கொணரப்படவேண்டும். அதன் அடிப்படையில் இந்தமாபெரும் செயலுக்கு காரணமாக இருந்த அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்படவேண்டும்.

எனவே புதிதாக அமைய இருக்கின்ற அரசாங்கமும் பாராளுமன்றமும் இதனை ஒரு முக்கிய விடயமாக கருத்தில் எடுத்து இதனை ஒருஅரசியல் படுகொலையாக ஏற்று சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழுவை அமைத்து இந்த படுகொலையுடன் தொடர்புபட்ட அனைத்து முகவர்களையும்,உதவியாளர்களையும் கைதுசெய்து சட்டத்திற்கு முன் நிறுத்தவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகியநாம் இந்நாளில் உறுதியாகக் கோருகின்றோம்.



இதற்காக அமையவிருக்கின்றபாராளுமன்றத்தை நாம் ஒரு களமாக பயன்படுத்துவோம். பாராளுமன்றத்திற்கு உள்ளும்,வெளியும் இப்படுகொலைக்கு நீதிவேண்டியும் இவ் உண்மையான விசாரணைகள் வெளிக்கொணரப்படும். அகிம்மைர்Pதியில் போராட நாம் பின் நிற்கவும்மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624923

Translate