மட்டக்களப்பு கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தின் ஏற்பாட்டில் ''ஒரு துளி இரத்தம் வழங்கி ஓர் உயிரைக் காத்திடுவோம்'' எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வொன்று எதிர்வரும் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆலய பங்குத்தந்தை அருட்பணி லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் அன்றையதினம் காலை 8.30 மணிக்கும் ஆரம்பமாகி பி.ப 12.30 மணிவரை நடைபெறவுள்ள இவ் இரத்ததான நிகழ்வில் ஆர்வமுள்ள இரத்த கொடையாளர்கள் அனைவரும் பங்குகொண்டு தாங்களும் ஓர் உயிரைக்காக்கும் பங்காளராக மாற அன்புடன் அழைக்கின்றனர் பங்குத்தந்தையுடன் இணைந்து கிறிஸ்தவ வாழ்வு சமூகத்தினர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக