புதன், 15 ஜூலை, 2015

காவியா பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் அதனை துணை நிறுவனமான காவியா பெண்கள் அமைப்பு ஏற்பாடுசெய்த மாபெரும் இப்தார் நிகழ்வு இன்று மாலை மாமாங்கத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் நிறுவுனர் தேமானிய ரஞ்சிதமூர்த்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

காவியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பின் தலைவி ரதி அஜித்குமாரின் வரவேற்புரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் இஸ்லாமிய நண்பர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.மாமாங்கதிற்கு புதிய அலுவலகம் மாற்றப்பட்டு முதல் நிகழ்வாக இந்த இப்தார் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் நிறுவுனர் தேமானிய ரஞ்சிதமூர்த்தி மற்றும் இஸ்லாமிய நண்பர்களும் உரையாற்றினர்.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624960

Translate