மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வாக்கு வங்கியை யாரும் குறைத்துமதிப்பிடமுடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று மாலை வாவிக்கரையில் உள்ள கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குரிய வாக்கு வங்கி என்பது தொடர்ந்து இருந்தவண்ணமேயுள்ளது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வாக்கு வங்கியை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புகுள் தாக்கம் செலுத்துகின்றது.ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையே அந்த நாட்டின் மக்களின் அபிவிருத்தியாகும்.இதில் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மிக தெளிவாகவுள்ளோம்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை காரணமாக குழப்ப நிலைகள் ஏற்பட்டு நாடு ஸ்தம்பித நிலைக்கு வந்துள்ளது.இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் இணைந்துள்ளார்கள்.
இந்த இணைவு தென்பகுதியில் பெரிய ஓரு மாற்றத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பெருவாரியான வெற்றியைபெற்று ஓரு நிரந்தரமான ஆட்சி கொண்டுவரப்படும்.அந்த ஆட்சியில் நாட்டினை கட்டியெழுப்பும் வாய்ப்பு ஏற்பட்டுஸ்திரதன்மையை அடையும்.
நேற்று மாலை வாவிக்கரையில் உள்ள கட்சி தலைமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வாக்குகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்குரிய வாக்கு வங்கி என்பது தொடர்ந்து இருந்தவண்ணமேயுள்ளது.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வாக்கு வங்கியை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புகுள் தாக்கம் செலுத்துகின்றது.ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையே அந்த நாட்டின் மக்களின் அபிவிருத்தியாகும்.இதில் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற அடிப்படையில் மிக தெளிவாகவுள்ளோம்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலை காரணமாக குழப்ப நிலைகள் ஏற்பட்டு நாடு ஸ்தம்பித நிலைக்கு வந்துள்ளது.இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் இணைந்துள்ளார்கள்.
இந்த இணைவு தென்பகுதியில் பெரிய ஓரு மாற்றத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு பெருவாரியான வெற்றியைபெற்று ஓரு நிரந்தரமான ஆட்சி கொண்டுவரப்படும்.அந்த ஆட்சியில் நாட்டினை கட்டியெழுப்பும் வாய்ப்பு ஏற்பட்டுஸ்திரதன்மையை அடையும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக