வியாழன், 9 ஜூலை, 2015

ஓகஸ்ட் 5 ஆம் 6 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்

பாடசாலைகளில் ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் திகதி வாக்களிக்கலாம் என்று மேலதிக தேர்தகள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

இதேவேளைஇ தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் பணி கடந்த 03ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யூ.அமரதாச தெரிவித்தார்.

தபால் மூலமான வாக்களிப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 2014ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அலுவலகங்களின் தொலைபேசி இலக்கங்களின் மூலமோ கையடக்க தொலைபேசி இலக்கங்களின் மூலமோ அறிந்துகொள்ள முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் சார்பாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate