ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

உணவு விஷமானதால் தாளங்குடா கல்வியியல் கல்லூரி மாணவிகள் வைத்தியசாலையில்


மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 25 பேர் உணவு விஷமானதால் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது. 

தாளங்குடாவில் அமைந்துள்ள கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் இரவு உணவை உட்கொண்ட போதே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர். 

காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்றோட்டம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டே இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக மாவட்ட வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 

குறித்த மாணவர்கள் உட்கொண்ட உணவு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate