திங்கள், 28 செப்டம்பர், 2015

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

தமிழ் முஸ்லீம் சிங்கள பாடசாலைகள் உள்ள கிழக்கு மாகாணத்தில் தமிழ் பாடசாலைகள் பௌதீக வளங்கள் அற்ற நிலையில் காணப்படுவதுடன் தமிழ் மாணவர்கள் பலர் கல்வியை தொடராது விலகி செல்கின்றனர் என சுவிட்சர்லாந்து முனைப்பு அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் தாந்தியான் வேதநாயகம் தெரிவித்தார்.

இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கும் முனைப்பு நிறுவனம் வருடாந்தம் நடத்தும் கதம்பமாலை நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை லுசெர்ன் நகரில் நடைபெற்றது.
எழுத்தாளர் கலாநிதி கல்லாறு சதீஸ், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மட்டக்களப்பை சேர்ந்தவரும் சர்வதேச ரீதியில் நடன நிகழ்ச்சிகளை வழங்கி வரும் நடனத்துறையில் முதுநுண்கலை பட்டத்தை பெற்ற நடனகலைஞருமான தவராசா மோகனப்பிரியனின் சிறப்பு நடன நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

IMG_7248
IMG_7224IMG_7229IMG_7231IMG_7235IMG_7239IMG_7240IMG_7243IMG_7244IMG_7246IMG_7248

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate