திங்கள், 21 செப்டம்பர், 2015

பழுகாமம் மாணவிகள் கபடிப்போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம்.

பழுவூரான்
அகில இலங்கை பாடசாலைக் கிடையிலான கபடிப் போட்டி நிகழ்வினில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய  15 வயதிற்குட்பட்ட பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கத்தினை பெற்றுள்ளனர். கடந்த 12,13,14 ஆகிய தினங்களில் திருகோணமலை கிண்ணியா தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இலங்கையின் 09 மாகணங்களிலிருந்தும் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் 27 அணிகள் பங்கு பற்றின பலத்த சவாலுகளுக்கு மத்தியில் இடம் பெற்ற போட்டியில் மட்/பட்/பழுகாமம் கண்டுமணி  மகா வித்தியாலயம் 15 வயது பெண்கள் அணியினர் வெள்ளிப்பதக்கத்தினை பதக்கத்தினைப் பெற்று எமதுகிழக்கு மாகாணத்திற்கு பெருமையினை ஈட்டிக் கொடுத்துள்ளனர்.

இவ் போட்டிநிகழ்வில் பங்கு பற்றிய அணிகளில் அதிகளவான விருதுகளைப் பெற்ற அணியாக கிழக்கு, வடக்கு தமிழ் அணிகளேயாகும். வெற்றியீட்டிய பாடசாலை மாணவர்களையும், பயிற்றுவிப்பாளர்களான புவி மற்றும் கிட்டு ஆகிய ஆசிரியர்களை வரவேற்கும் நிகழ்வு (15.09.2015) வாகன ஊர்வலத்துடன்  வரவேற்பளிக்கப்பட்டது.

பட்டிருப்பு கல்வி வலய வரலாற்றில் இதுவே முதற்தடவையாக தேசிய ரீதியில் குழு விளையாட்டில் வெற்றிபெற்றது.






Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624967

Translate