சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.
இலங்கையின் பிரபல சுற்றுலா தளமான பாசிக்குடா கடற்கரைக்கு இன்று ஞாயிற்றுக் கிழமை வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாச பயணிகள் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.
பாசிக்குடா கடற்கரையில் உல்லாச பயணிகள் குளித்து மகிழ்ந்ததுடன் நீர் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டதோடு, விசேட படகு சவாரியிலும் சுற்றுலா பயணிகள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அழகினால் மையப்பெற்றுள்ள இலங்கை நாட்டில் சுற்றா பயணிகளின் வருவகை அதிகளவில் காணப்படுவதுடன், எமது நாட்டிற்கு வெளிநாட்டவர்களால் வருமானத்தைப் பெற்றுத்தருவது இலங்கையின் இயற்கை வளங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக