புதன், 30 செப்டம்பர், 2015

சமுதாயத்தில் நல்ல சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய ஊடகமாக மாணவர்கள் திகழ முடியும் : உதவிப் பிரதேச செயலாளர் என். நவரூபரஞ்சினி

சமுதாயத்தில் நல்ல சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவந்து செயற்படுத்தக் கூடிய ஊடகமாக மாணவர்கள் திகழ முடியும் என மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்று செங்கலடி உதவிப் பிரதேச செயலாளர் என். நவரூபரஞ்சினி தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை பிரதேசப் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட தெங்கு தவிர்ப்பு சித்திரப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்கள், ஆசியரியர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார்.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஐ. சிறிநாத் தலைமையில் செங்கலடிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். கிருஷ்ணபிள்ளை, ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் கீர்த்தி பிறேமதிலக உள்ளிட்ட அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய உதவிப் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சினி கூறியதாவது, டெங்கு நோய் என்பது நாட்டையும் வீட்டையும் அச்சுறுத்துகின்ற ஒன்றாக தற்சயமம் மாறியுள்ளது.
இந்த அச்சுறுத்தலை வெறுமனே சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரமோ அன்றேல் நிருவாக அதிகாரிகள் மாத்திரமோ தனித்தனியே ஒழித்துக் கடம்டிவிட முடியாது.

இது ஒது கூட்டு முயற்சியினால் சாதிக்க வேண்டிய விடயம். அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கூடாக டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள், அதிபர்கள், ஏனைய அதிகாரிகள் இருந்து பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்டி வீட்டையும் நாட்டையும் பாதுகாக்க முடியும்' என்றார்.

பிரதேசப் பாடசாலை மாணவரிடையே நடத்தப்பட்ட டெங்க ஒழிப்பு சித்திரம் வரைதல் போட்டியில் செங்கலடி மத்திய கல்லூரில் ஏழாம் ஆண்டு கற்கும் மாணவி என். சுதர்ஷிகா முதல் பரிசான ஐயாயிரம் ரூபாவையும் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஐ. சிறிநாத் தலைமையில் செங்கலடிப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். கிருஷ்ணபிள்ளை, ஏறாவூர் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் கீர்த்தி பிறேமதிலக உள்ளிட்ட அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624947

Translate