கிழக்கு மாகாண கலைகலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண கூத்துவிழா மற்றும் கூத்துப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் வெற்றிபெற்றுள்ளது.
கிழக்கு மாகாண கூத்துவிழா மற்றும் கூத்துப்போட்டியானது கடந்த வியாழக்கிழமை தொடக்கம் நேற்று சனிக்கிழமை இரவு வரை மூன்று தினங்கள் மட்டக்களப்பில் நடைபெற்றுவந்தது.
இந்த விழா மற்றும் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து 12 கலைக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
இதன் இறுதி நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக கிழக்கு மாகாண கலை,கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டபிள்யு.ஏ.எல்.விக்ரம ஆராய்ச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கூத்து நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
நடைபெற்ற வடமோடிக்கூத்துப்போட்டிகளில் வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகம் முதல் இடத்தினையும் முனைக்காடு மகா சக்தி கலைக்கலைகழகம் இரண்டாம் இடத்தினையும் மகிழடித்தீவு கண்ணகி கலைக்கழகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
தென்மோடி கூத்துப்போட்டியில் முதல் இடத்தினை பருத்துச்சேனை கலைமகள் கலை மன்றமும் இரண்டாம்இடத்தினை வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகமும் பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாண கூத்துவிழா மற்றும் கூத்துப்போட்டியானது கடந்த வியாழக்கிழமை தொடக்கம் நேற்று சனிக்கிழமை இரவு வரை மூன்று தினங்கள் மட்டக்களப்பில் நடைபெற்றுவந்தது.
இந்த விழா மற்றும் போட்டிகளில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து 12 கலைக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
இதன் இறுதி நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகியம்மன் ஆலய முன்றிலில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக கிழக்கு மாகாண கலை,கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் டபிள்யு.ஏ.எல்.விக்ரம ஆராய்ச்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது கூத்து நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
நடைபெற்ற வடமோடிக்கூத்துப்போட்டிகளில் வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகம் முதல் இடத்தினையும் முனைக்காடு மகா சக்தி கலைக்கலைகழகம் இரண்டாம் இடத்தினையும் மகிழடித்தீவு கண்ணகி கலைக்கழகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
தென்மோடி கூத்துப்போட்டியில் முதல் இடத்தினை பருத்துச்சேனை கலைமகள் கலை மன்றமும் இரண்டாம்இடத்தினை வவுணதீவு விபுலானந்தா கலைக்கழகமும் பெற்றுக்கொண்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக