சமூகச் சீரழிவுகளைச் சித்தரிக்கும் விழிப்புணர்வு தெருநாடகம் மக்கள் கூடுமிடங்களில் நடத்தப்பட்டு வருவதாக வண்ணத்துப் பூச்சி சமாதானப் பூங்கா பணியாளர் ஸ்ரெல்லா ஜேம்ஸ் தெரிவித்தார்.
உளநல உதவி நிலையத்தின் நிதி அனுசரணையுடன் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா கலைஞர்களினால் நடத்தப்பட்டு வரும் தெருவோர விழிப்புணர்வு நாடகம் புதன்கிழமை ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.
குடிபோதை, சிறுவர் துஷ்பிரயோகம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட இன்னபிற சமூகச் சீரழிவுகளையும் அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளையும் சித்தரிப்பாக இந்த விழிப்புணர்வு குறு நாடகம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
தெருவில் கூடிய தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஆண், பெண், சிறுவர்கள், வளர்ந்தோர் ஆகிய எல்லாத் தரப்பினரும் இந்த நாடகத்தைக் கண்டு களித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
உளநல உதவி நிலையத்தின் நிதி அனுசரணையுடன் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா கலைஞர்களினால் நடத்தப்பட்டு வரும் தெருவோர விழிப்புணர்வு நாடகம் புதன்கிழமை ஏறாவூர் நகரில் இடம்பெற்றது.
குடிபோதை, சிறுவர் துஷ்பிரயோகம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட இன்னபிற சமூகச் சீரழிவுகளையும் அதனால் ஏற்படும் பாரதூரமான விளைவுகளையும் சித்தரிப்பாக இந்த விழிப்புணர்வு குறு நாடகம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
தெருவில் கூடிய தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த ஆண், பெண், சிறுவர்கள், வளர்ந்தோர் ஆகிய எல்லாத் தரப்பினரும் இந்த நாடகத்தைக் கண்டு களித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக