ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான புகையிரத சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதி புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலிபா தெரிவித்தார். புகையிரத திணைக்கள துணை இயக்க அத்தியட்சரின் 585 சீ இலக்க சுற்று நிருபத்துக்கு அமைய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய மட்டக்களப்பில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் உதயதேவி புகையிரதம் காலை 6.10 க்கு புறப்பட்டு பிற்பகல் 3.15க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும். மாலை 5.30 க்கு மட்டக்களப்பில் இருந்து புறப்படும் புகையிரதம் 5.20 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.
இரவு 8.30 க்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு புறப்படும் பாடும் மீன் நகர்சேர் கடுகதி புகையிரதம் இரவு 8.15 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.53 க்கு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும். இதேவேளை காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து மாகோ சந்தி வரை செல்லும் புகையிரதம் 12 ஆம் திகதி முதல் 10.15 க்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும்.
மேலும் கொழும்பில் இருந்து மாலை 7. 15 க்கு மட்டக்களப்புக்கு புறப்படும் பாடும் மீன் நகர்சேர் கடுகதி புகையிரதம் மாலை 7.00 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 க்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பில் இருந்து காலை 7.15 க்கு புறப்படும் உதயதேவி புகையிரதம் காலை 6.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.45 க்கு மட்டக்களப்பை சென்றடையும். இரவு 9.45 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் புகையிரதம் 9.30 க்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு மட்டக்களப்பைச் சென்றடையும்.
இந்த நேர மாற்றம் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்துக்கு முன்னர் 2014 அக்டோபர் மாதத்திலும் மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நேர மாற்றம் அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருடத்துக்கு முன்னர் 2014 அக்டோபர் மாதத்திலும் மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக