ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

மட்­டக்­க­ளப்பு–கொழும்பு ரயில் சேவையில் மாற்றம்

 ஒக்­டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் மட்­டக்­க­ளப்­புக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான புகை­யி­ரத சேவை­களில் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு பிரதி புகை­யி­ரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலிபா தெரி­வித்தார். புகை­யி­ரத திணைக்­கள துணை இயக்க அத்­தி­யட்­சரின் 585 சீ இலக்க சுற்று நிரு­பத்­துக்கு அமைய இந்த மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.
இதற்­க­மைய மட்­டக்­க­ளப்பில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்­படும் உத­ய­தேவி புகை­யி­ரதம் காலை 6.10 க்கு புறப்­பட்டு பிற்­பகல் 3.15க்கு கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும். மாலை 5.30 க்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து புறப்­படும் புகை­யி­ரதம் 5.20 க்கு புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 3.30 க்கு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும்.
இரவு 8.30 க்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து கொழும்­புக்கு புறப்­படும் பாடும் மீன் நகர்சேர் கடு­கதி புகை­யி­ரதம் இரவு 8.15 க்கு புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 4.53 க்கு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்தை சென்­ற­டையும். இதே­வேளை காலை 10.30 மணிக்கு மட்­டக்­க­ளப்பில் இருந்து மாகோ சந்தி வரை செல்லும் புகை­யி­ரதம் 12 ஆம் திகதி முதல் 10.15 க்கு புறப்­பட்டு மாலை 5.30 மணிக்கு மாகோ சந்­தியை சென்­ற­டையும்.
மேலும் கொழும்பில் இருந்து மாலை 7. 15 க்கு மட்­டக்­க­ளப்­புக்கு புறப்­படும் பாடும் மீன் நகர்சேர் கடு­கதி புகை­யி­ரதம் மாலை 7.00 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்­பட்டு மறுநாள் அதி­காலை 3.55 க்கு மட்­டக்­க­ளப்பை சென்­ற­டையும். கொழும்பில் இருந்து காலை 7.15 க்கு புறப்­படும் உத­ய­தேவி புகை­யி­ரதம் காலை 6.05 மணிக்கு புறப்­பட்டு பிற்­பகல் 2.45 க்கு மட்­டக்­க­ளப்பை சென்­ற­டையும். இரவு 9.45 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்­படும் புகை­யி­ரதம் 9.30 க்கு புறப்­பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு மட்­டக்­க­ளப்பைச் சென்­ற­டையும்.

இந்த நேர மாற்றம் அக்­டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் அமுல்­ப­டுத்­தப்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒரு வருடத்துக்கு முன்னர் 2014 அக்டோபர் மாதத்திலும் மட்டு. கொழும்பு ரயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624947

Translate