ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

பாசிக்குடா பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின்  பாசிக்குடா  பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பேத்தாழை சிவன்கோயில் வீதியைச் சேர்ந்த வி. பரசுராமன் வயது (55) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதே இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட சேர்ந்த கே. கமலநாதன் வயது (54) படு காயமடைந்த நிலையில் முன்னதாக வாழைச்சேனை  ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கல்குடா பிரதேசத்தில் இருந்து துவிச்சக்கரவண்டியில் பேத்தாழை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் நேரேதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

யில் உள்ள தங்களது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தவர்களை குறித்த மேற்படி பிரதேசத்தில் இருந்து அதே வழியாக  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.



Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624982

Translate