திங்கள், 28 செப்டம்பர், 2015

“விலங்கு விசர் நோயை இல்லாது ஒழிக்க ஒன்றுபடுவோம்” விழிப்புணர்வு ஊர்வலம்

இலங்கையில் விலங்கு விசர் கடிநோயை இல்லாதொழிப்போம் என்னும் தொனிப்பொருளிலான உலக விலங்கு விசர் நோய் தினம் இன்று நாடெங்கும் அனுஸ்டிக்கப்பட்டது.


இலங்கையில் இருந்து 2020ஆம் ஆண்டு விலங்கு விசர் நோயை இல்லாதொழிக்கும் வகையில் இன்றைய தினம் தொடக்கம் விசேட வேலைத்திட்டத்தினை சுகாதார அமைச்சும் சுகாதார திணைக்களமும் இணைந்து ஆரம்பித்துள்ளது.

விலங்கு விசர் நோயை இல்லாது ஒழிக்க ஒன்றுபடுவோம் என்னும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகத்தின் தலைமையில் இந்த விழிப்புணர் நிகழ்வு நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி எப்.ஆர்.பி.ரஞ்சன் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்,குடும்பநல உத்தியோகத்தர்கள்,மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2009ஆம் ஆண்டு விலங்கு விசர் கடிநோய் காரணமாக 11பேர் உயிரிழந்ததுடன் 2014ஆம் ஆண்டு இந்த உயிரிழப்பு ஒன்றாக குறைவடைந்ததாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

எனினும் இந்த விலங்கு விசர் கடி நோயை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனமட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி காhரியாலத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு நகர் ஊடாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகம் வரையில் சென்றது.

ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் விலங்கு விசர்நோய் வைரஸ் கிருமியினால் ஏற்படுகின்றது,சகல நாய்களுக:கும் தடுப்பூசி மருந்து ஏற்றுவோம்,விசர்கொண்டநாய் மனிதனை கடிப்பதன் மூலமோ அல்லது விசர்நாயின் உமிழ் நீர் காயங்களில் படுவதன் மூலமோ ஒருமனிதனுக்கு விசர் நோய் ஏற்படலாம்,2020ஆம்ஆண்டு விசர்நாய்கடி நோயற்ற இலங்கை உட்பட பல விழிப்புணர்வு சுலோகங்கள் கொண்ட பதாகைகளையும் ஊர்வலத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.




















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate