மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு “உயிர் காக்கும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவுங்கள் ”எனும் தொனிப்பொருளில் (யூஸ்) காத்தான்குடி கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள 2வது மாபெரும் இரத்ததான முகாம் 26-09-2015 சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை காத்தான்குடி-05 மட்-அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
சகல பொது மக்களையும் இத் தூய பணியில் கலந்து கொள்ளுமாறு (யூஸ்) காத்தான்குடி கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் வேண்டுகோள் விடுக்கின்றது.
குறிப்பு-பெண்கள் இரத்ததானம் செய்வதற்கு பிரத்தியேக ஏற்பாடுகள் செய்ப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக