கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச நிகழ்வானது இன்று (23) புதன் கிழமை மாலை பஞ்சபாண்டவர் திரௌபதைதேவி சகிதம் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி மணற்சேணை ஊடாக நற்பிட்டிமுனை பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இளைப்பாறி உணவருந்தல் நிகழ்வினை தொடர்ந்து சேணைக்குடியிருப்பு காளி கோயிலை சென்றடைந்து அங்கு ஆராதணைகளை தொடர்ந்து மேட்டு வட்டை யுடாக பாண்டிருப்பு மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அடைந்து அங்கிருந்து மீண்டும் திரெளபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.
இன் நிகழ்வின் பொது பல திசையில் இருந்தும் பல்லாயிரக்கனக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
0 facebook-blogger:
கருத்துரையிடுக