புதன், 30 செப்டம்பர், 2015
Home »
» ஏறாவூர் பற்றுக் கோட்டத்தில் கற்றல் உபகரணக் கண்காட்சி
ஏறாவூர் பற்றுக் கோட்டத்தில் கற்றல் உபகரணக் கண்காட்சி
மட்டக்களப்பு மேற்கு வலய ஏறாவூர் பற்றுக் கோட்ட பாடசாலைக்கு இடையிலான ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் உபகரண கண்காஏட்சியும் போட்டியும் இன்று கரடியனாறு மகா வித்தியாலயத்தில் கோட்டக் கல்வி அதிகாரி எம்.முருகேசபிள்ளை அவர்கள் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) எஸக.ஹரிகரராஜ், உதவிக் கல்விப் பணிபணிப்பாளர் ஆரம்பக்கல்வி) எம். மாணிக்கப்போடி, வித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக