திங்கள், 21 செப்டம்பர், 2015

புதுக்குடியிருப்பு படுகொலை நினைவுதினம் உணர்வுபூர்வமான அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ் மக்கள் 17 பேர் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 25வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.


இந்த நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு காலை 06.30 மணிக்கு புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடும்,

09.00 மணிக்கு புதுக்குடியிருப்பு சக்தி பாலர்பாடசாலையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் பிற்பகல் புதுக்குடியிருப்பு கடற்கரையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

புதுவை அமைப்பின் தலைவர் திரு மா.சதாசிவம் தலமையில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன்,

கிழக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் சட்டத்தரணி துரைராசசிங்கம், பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், உறுப்பினர்களான திரு மா.நடராசா, திரு கிருஸ்ணபிள்ளை, திரு இராஜேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உயிர் நீத்த உறவுகளுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினார்கள் .

கடந்த 1990 அம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு இராணுவ சீருடை அணிந்த ஊர்காவற்படையினர் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்து தங்களது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தமிழ் மக்களை எழுப்பி,தாங்கள் இராணுவத்தினர் என்றும் ஊரை சுற்றி வளைத்துள்ளதாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி பெண்கள் ஆண்கள் முதியவர்கள் உட்பட 45 பேரை கடற்கரை ஓரத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் வெட்டி படுகொலை செய்துகொண்டிருக்கும்வேளை,

இளைஞர் ஒருவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பியோட அவசர அவசரமாக துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு ஊர்காவற்படையினர் தப்பியோடிவிட்டனர். இதன்போது இவர்களினால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.








Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624949

Translate