பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச நிகழ்வானது நேற்றய தினம்(23) வெகுசிறப்பாக இடம்பெற்றது.
இவ் வனவாச நிகழ்வில் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு பக்த அடியார்கள் காவடி,தீ சட்டி ஏந்துதல் என்பன இடம்பெற்றது.
இவ்வாறு தீ சட்டி ஏந்தி நேர்த்திகடனை நிறைவேற்றிய நட்பிட்டிமுனையை சேர்ந்த 54 வயதுடைய யோகேஸ்வரி என்பவர் நற்பிட்டிமுனை முருகன் ஆலயத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
அவரை அங்கிருந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துவரும் வேளை மரணமடைந்துள்ளார்.
அவரது சடலம் நட்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளது.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை 5.00 மணியலவில் நற்பிட்டிமுனை
மயானத்தில் இடம்பெறும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக