வியாழன், 24 செப்டம்பர், 2015

மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடைகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சீருடைன வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு,கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.


கிழக்கு மாகாண முன்பள்ளி பணிமனையின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 10 பிரதேச செயலகங்களில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கிழக்கு கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் வழங்கிய சுமார் 15 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடுகள் மூலம் இந்த சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 513 முன்பள்ளிகளில் இருந்து 964 ஆசிரியர்களுக்கு இந்த சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் முன்பள்ளி திணைக்கள அதிகாரிகள்,மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஐ.நா.வினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடந்த போருக்கு சர்வதேச விசாரணை தேவை,அது கலப்பு நீதிமன்றம் ஊடாக விசாரணை நடாத்தப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணை முடிந்துவிட்டதாக சில முதிர்ந்த அரசியல்வாதிகள் மக்களை குழப்பிவருவதாகவும் அவர் இங்கு தெரிவித்தார்.




















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624969

Translate