திங்கள், 28 செப்டம்பர், 2015

முத்தான வியர்வை –தேற்றாத்தீவில்

(இலக்யா)
முத்தான வியர்வை எனும் தலைப்பில் வாழ்வின் எழுச்சி அபிவித்தி திணைக்கழம் ஏற்பாட்டில் பகல் சந்தை இன்று(28.09.215) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிளையார் ஆலய முன்றலில் மன்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.இவ் பகல் சந்தையில் பலதரப்பட்ட உற்பத்தி பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.



இன் நிகழ்வின் போது குறைந்த வட்டியிலான கடன் பொதுமக்களிற்கு வழங்கபட்டதுடன் விற்பனையில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களும் பொருட்களை கொள்வனவு செய்தார்.இவ் சந்தை நாளையும் காலை முதல் மாலை வரை இடம் பெறவுள்ளது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate