வியாழன், 11 ஜூன், 2015

மாடு குத்திய பெண் பத்துநாளின் பின் மரணம்

மாடு குத்­தி­யதால் படு­கா­ய­ம­டைந்து மட்­டக்­க­ளப்பு போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த மாங்­காடு எனும் இடத்தைச் சேர்ந்த ஐந்து பிள்­ளை­களின் தாயா­ரான க. கெங்­கேஸ்­வரி (வயது 63) பத்து நாட்­களின் பின்னர் மர­ண­மாகியுள்ளார்.
இவரின் மரண விசா­ர­ணை மண்டூர் திடீர் மரண விசா­ரணை அதி­காரி த. காரா­ள­சிங்­கத்­தினால் நடத்­தப்­பட்­டது. இறந்­த­வரின் மக­ளான மா. மகேந்­தி­ர­வ­தனி மரு­மகன் த. சந்­தி­ர­சே­கரம் ஆகியோர் சாட்­சி­ய­ம­ளித்­தனர். வீட்டு கேற்றின் முன்­பாக நின்ற போது வேக­மாக வந்த மாடு குத்தி காய­ம­டைந்த இவர் முதலில் செட்­டிப்­பா­ளையம் வைத்­தி­ய­சா­லை­யிலும் பின்னர் மட்டு. போதனா வைத்­தி­ய­சா­லை­யிலும் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக விசா­ர­ணையின் போது சாட்­சி­ய­ம­ளிக்­கப்­பட்­டது.

பிரேத பரி­சோ­தனை செய்த சட்ட வைத்­தியர் யாப்பா பண்­டார காயத்­தினால் ஏற்­பட்ட இரத்­தப்­பெ­ருக்கின் கார­ண­மாக மரணம் ஏற்­பட்­ட­தாக அறிக்கை சமர்ப்பித்தார். விபத்து மரணம் என்று மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate