மாடு குத்தியதால் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாங்காடு எனும் இடத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயாரான க. கெங்கேஸ்வரி (வயது 63) பத்து நாட்களின் பின்னர் மரணமாகியுள்ளார்.
இவரின் மரண விசாரணை மண்டூர் திடீர் மரண விசாரணை அதிகாரி த. காராளசிங்கத்தினால் நடத்தப்பட்டது. இறந்தவரின் மகளான மா. மகேந்திரவதனி மருமகன் த. சந்திரசேகரம் ஆகியோர் சாட்சியமளித்தனர். வீட்டு கேற்றின் முன்பாக நின்ற போது வேகமாக வந்த மாடு குத்தி காயமடைந்த இவர் முதலில் செட்டிப்பாளையம் வைத்தியசாலையிலும் பின்னர் மட்டு. போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டதாக விசாரணையின் போது சாட்சியமளிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை செய்த சட்ட வைத்தியர் யாப்பா பண்டார காயத்தினால் ஏற்பட்ட இரத்தப்பெருக்கின் காரணமாக மரணம் ஏற்பட்டதாக அறிக்கை சமர்ப்பித்தார். விபத்து மரணம் என்று மரண விசாரணை அதிகாரி தீர்ப்பு வழங்கினார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக