உறவுகளுடன் உறவாடுவோம் எனும் முதலாம் நாள் நிகழ்வு 06.06.2015ம் திகதி அரசடித்தீவு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மேற்கு வலய கோட்டக்கல்விப் பணிப்பாளர் த.சோமசுந்தரம் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் தொடக்கவுரையினை இளங்கதிர் கலாமன்றத்தன் உப தலைவர் சி.பார்த்தீபன் நிகழ்த்துவார். சிறக்புக் கருத்துரையை பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஆலோசகர் த.தியாகராஜா நிகழ்த்துவார்.
இதன் போது கவி, காவியம், தோத்திரம், மந்திரம், வசந்தன், உழவர்பாடல், கூத்து மகேப்பேற்று மருத்துவம், மீனவர் பாடல், ஊஞ்சல் பாடல்கள் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
மறுநாள் இரண்டாம் நாள் நிகழ்வுகளில் பட்டிப்பளை சந்தியில் இருந்து பண்பாட:டு ஊர்வலம் ஆரம்பமாகி கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் வரை செல்லும். அதனையடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்க குருக்களின் ஆசியுரையுடன் நிகழ்வுகள் நடைபெறும்.
நிகழ்வில், முகவரி சஞ்சிகை வெளியீடு நடைபெற்று சஞ்சிகையின் ஆய்வுரையினை கிராமிய கலைச்சுடர் கவிஞர் மு.குணரெத்தினம் வழங்குவார்.
முக்கிய நிகழ்வாக, மகப்பேற்று வைத்தியத்துக்காக திருமதி மா.மனோன்மணி, திருமதி ஆ.நேசம்மா, கூத்துக் கலைக்காக கி.கோபாலப்பிள்ளை. இலக்கியத்துறைக்காக மா.கேதாரப்பிள்ளை, நாட்டார் பாடலுக்காக திருமதி க.பற்பகம், ஊடகத்துறைக்காக பா.இன்பராசா ஆகியோர் கொளரவிக்கப்படவுள்ளனர். அத்துடன், சிறந்த கலைக்கழகத்துக்கான விருது முனைக்காடு நாகசக்தி கலை மன்றத்திற்கு வழங்கப்படுகிறது.
அதே நேரம், மண்கமழும் கலை நிகழ்வு போட்டிகளில் வெற்றி பெற்றறோருக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, வாகரை அம்பந்தனாவெளி இளம்பிளை கலை மன்றத்தின் புலிக்கூத்து ஆற்றுகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளத.
0 facebook-blogger:
கருத்துரையிடுக