காத்தான்குடியில் ´வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம்´ எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் மைய்யவாடியை புனரமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எதிர் காலத்தில் இன்னுமொரு தடவை மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்திற்குள் வருவதற்கு உதவி செய்கின்ற மக்களாக நாம் இருக்க கூடாது என தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் அமீர் அலி, இந்த பிராந்தியத்திலே இருக்கின்ற சில அரசியல் தலைவர்கள் இந்த நாட்டில் நல்லாட்சி வரக் கூடாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ் தான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்றும் கடுமையாக உழைத்த போதிலும் கூட தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு ஒரு மித்த கருத்திலே முழு சமூகமுமே மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக வரவேண்டும் நாம் வாக்களித்தோம்.
எதிர்காலத்தில் இன்னுமொரு தடவை மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்திற்குள் வருவதற்கு உதவி செய்கின்ற மக்களாக இருக்க கூடாது என நான் வினயமாக கேட்டுக் கொள்கின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்திற்கு வருவதென்பது எம்மைப் போன்ற சிறுபான்மை மக்களுக்கு மீண்டும் எதிர்காலத்தில் ஒரு பழிவாங்களுக்கு இன சுத்தகரிப்புக்கு அடித்தளமிடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ்வுக்காக எந்த அரசியல் வாதிகள் வக்களாத்து வாங்கினாலும் சமூக வாஞ்சையுடன் ஒற்றுமைப்பட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்தீர்களோ அதே போன்று எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அந்த தெரிவுக்கு வாக்களிக்கும் மக்களாக இருக்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை எதிர்காலத்தில் தக்க வைத்துக் கொள்வதென்ற நிலவரம் இனிவரப்போகும் தேர்தல் முறையிலே ஒரு பிரச்சினையான நிலவரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுக்கு உண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மட்டக்களப்பு தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டாலும் கூட இந்தப் பிரசேத்திலே ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாது.
156,000 தமிழ் வாக்குகளையும், காத்தான்குடியும் ஏறாவூரும் சேர்ந்து 51,000 வாக்குகளையும் வைத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை எடுக்க முடியுமென்று கதை சொன்னால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இங்குள்ள புத்திஜீவிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பிரதி நிதித்துவத்தை பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. அதற்காக கடுமையாக உழைத்திருக்கின்றோம்.
இந்த நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு விஷேடமாக வில்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற முஸ்லிம்களை மீளக்குடியேற வேண்டும் என்ற நிலவரத்தில் நாங்களும் எமது தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களும் எடுத்துக் கொண்ட அந்த முயற்சியிலே தேசிய மட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் எங்களுக்கு பக்கதுணையாக குரல் கொடுப்பதற்கு தயாராக இல்லை.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை இருந்தாலும் அங்கு நாம் குரல் கொடுக்க வேண்டும். அவர்களுக்காக பேசவேண்டும்.
மன்னாலிருந்து துரத்தப்பட்ட ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்களை மீண்டும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சிகளை முஸ்லிம்களில் தேசிய தலைவர்கள் என்றும் பிராந்திய தலைவர்கள் என்றும் ஒரு குழுவின் பகுதி தலைவர்கள் என்றும் கூறுக்கொள்கின்றவர்கள் வாய் மூடி மௌனியாக இருக்கின்றார்கள்.
எமது சமூகம் பாதிக்கப்பட்டது என்ற காரணத்திற்காக அழுத்கம சம்பவம், பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்ட சம்பவங்கள் என்பன போன்ற காரணங்களுக்காகத் தான் நாங்கள் துனிவோடும் தைரியத்துடனும் மஹிந்தவின் வீட்டுப் பிள்ளைகளாக இருந்தும் கூட சமூகம் பாதிக்கப்படப் போகின்றதே என்று தெரிந்து கொண்டதன் பின்னர், சமூகம் பெரிதா பதவிகள் பெரிதா என்பதை நிறுத்துப் பார்த்த போது எங்களுக்கு எங்களுடைய முஸ்லிம் சமூகமே பெரிதாக தெரிந்தது. எமது பிரதேச முஸ்லிம்களின் உணர்வுகள் எங்களுக்கு இதை உனர்த்தியது.
வில்பத்து விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த வில்பத்து மக்களுக்காக நாங்கள் கிழக்கில் கையெழுத்து வேட்டையை செய்ய விருக்கின்றோம்.
ஜம் இய்யத்துல் உலமா சபை மூலமாக அந்த கையெழுத்து வேட்டையை மேற்கொண்டு இங்குள்ள அனைவரும் கையொப்பத்தை இடவேண்டும். அதை நாங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்க விருக்கின்றோம்.
வில்பத்து முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதற்காக கிழக்கிலுள்ள அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான ஏ.எம்.மாஹீர், லெவ்வை ஹாஜியார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வெள்ளி, 12 ஜூன், 2015
Home »
காத்தான்குடி
» மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றம் வருவதற்கு உதவி செய்கின்ற மக்களாக நாம் இருக்க கூடாது - அமீர் அலி
0 facebook-blogger:
கருத்துரையிடுக