மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட தேவாபுரம் முறக்கெட்டான்சேனை பிரதேசத்தில் இளம் யுவதி தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.தேவாபுரம் ஐங்கரன் வீதியில் வசிக்கும் நடேசன் சகானா (வயது 21) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.இன்று (6) காலை சுமார் 7 மணியளவில் உயிரிழந்தவரின் படுக்கை அறையை பார்த்தபோது துணியினால் கழுத்தைக்கட்டி சுருக்கிட்டு தூங்கிகொண்டிருப்பதை கண்டதாகவும் உடனடியாக மீட்டு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த யுவதி கோரளைப்பற்று பிரதேச சபையில் பயிற்சியாளராக கடமையாற்றுவதாகவும் தெரியவருகின்றது.குறித்த தூக்கிட்டு உயிரிழந்துள்ள யுவதியின் உயிரிழப்பு தொடர்பான காரணங்களை ஏறாவூர் பொலிசார் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக