வெள்ளி, 5 ஜூன், 2015

மட்டு நகர் பொலிஸாரின் ஏற்பாட்டில் புகைத்தல் எதிர்ப்பு வார நிகழ்வுகள்!

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள். புகைத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். பேரணி நிறைவில், மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.ரஹ்மான் புகைத்தல் தொடர்பான பாதிப்புக்கள் குறித்து விளக்கங்களை வழங்கினார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.பெர்ணாண்டோ, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எபாலி ஜயசிங்க, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate