வெள்ளி, 11 செப்டம்பர், 2015

கிழக்கில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி வளப்பங்கீட்டில் மாற்றம் ஏற்படலாம். மாகாண கல்விப்பணிப்பாளர்

கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பாட­சா­லை­களில் கல்வி கற்­கின்ற தமிழ் மாண­வர்­களின்
எண்­ணிக்கை வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வ­தாக கிழக்கு மாகாண கல்­விப்­ப­ணிப்­பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரி­வித்தார்.
இந்த நிலைமை தொட­ரு­மானால் மாகாண வளப்­பங்­கீ­டு­க­ளிலும் மாற்றம் ஏற்­ப­டலாம் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கிழக்கு மாகாண கல்­வித்­தி­ணைக்­களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரி­ய­வந்­துள்­ள­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கிழக்கு மாகா­ணத்தில் 1,51 262 தமிழ் மாண­வர்­களும் 1,61,700 முஸ்லிம் மாண­வர்­களும் 81,580 சிங்­கள மாண­வர்­களும் கல்வி கற்று வரு­கின்­றனர்.
கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் பா­டசா­லை­களை விட தமிழ் பாடச­ா­லைகள் கூடு­த­லாக காணப்­ப­டு­கின்ற போதிலும் தமிழ் பாட­சா­லை­களில் கல்வி கற்­கின்ற தமிழ் மாண­வர்­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்சி ஏற்­பட்டுச் செல்­வது ஒரு ஆரோக்­கி­ய­மான சூழல் அல்ல எனவும் குறிப்­பிட்டார்.
இவ்­வா­றான நிலை தொட­ரு­மானால் மாகாண கல்வி வளப்­பங்­கீ­டு­க­ளிலும் பாரி­ய
மாற்றம் ஏற்­பட சந்­தர்ப்­ப­முண்டு. இதன் மூலம் தேவை­யற்ற வாதங்கள் முன் வைக்­கப்­படும்.
இது தொடர்பில் மாகா­ணத்­தி­லுள்ள அர­சியல்வாதி­க­ளுக்கு தெளிவூட்­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
வறுமை மற்றும் பொரு­ளா­தார பிரச்­சி­னைகள், குடும்ப தலை­வர்கள் இழக்­கப்­பட்­டமை, பிள்­ளை­களை பெற்றுக் கொள்­வதில் ஆர்­வ­மின்மை, திரு­மண வய­தெல்லை நீடிக்­கின்­றமை, குடும்பக் கட்­டுப்­பாடு போன்ற பல கார­ணங்­களே பாடசாலைகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதற்கு காரண மென தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate