கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தமிழ் மாணவர்களின்

இந்த நிலைமை தொடருமானால் மாகாண வளப்பங்கீடுகளிலும் மாற்றம் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 1,51 262 தமிழ் மாணவர்களும் 1,61,700 முஸ்லிம் மாணவர்களும் 81,580 சிங்கள மாணவர்களும் கல்வி கற்று வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பாடசாலைகளை விட தமிழ் பாடசாலைகள் கூடுதலாக காணப்படுகின்ற போதிலும் தமிழ் பாடசாலைகளில் கல்வி கற்கின்ற தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுச் செல்வது ஒரு ஆரோக்கியமான சூழல் அல்ல எனவும் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலை தொடருமானால் மாகாண கல்வி வளப்பங்கீடுகளிலும் பாரிய
மாற்றம் ஏற்பட சந்தர்ப்பமுண்டு. இதன் மூலம் தேவையற்ற வாதங்கள் முன் வைக்கப்படும்.
இது தொடர்பில் மாகாணத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கு தெளிவூட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வறுமை மற்றும் பொருளாதார பிரச்சினைகள், குடும்ப தலைவர்கள் இழக்கப்பட்டமை, பிள்ளைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வமின்மை, திருமண வயதெல்லை நீடிக்கின்றமை, குடும்பக் கட்டுப்பாடு போன்ற பல காரணங்களே பாடசாலைகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைவதற்கு காரண மென தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக