வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட மயில் கட்டுத் திருவிழா

வரலாற்று சிறப்பு பெற்ற சித்தாண்டி ஸ்ரீ வள்ளி குஞ்சரி சமேத ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி பேராலய வருடாந்த ப்ரம்மோற்சவப் பெருவிழாவின் மயில் கட்டு விசேட திருவிழா வியாழக்கிழமை (28) நடைபெற்றது.ஆலயத்தின் பதின் மூன்றாவது நாளாகிய பொருவிழாவின் மிகவும் முக்கிய விசேட திருவிழாவாக மயில் கட்டுத் திருவிழா அமைவதுடன் தெய்வீகத்தன்மை வாய்ந்ததும் மிகவும் முக்கிய பாராம்பரிய அதிவிசேட திருவிழாவாக சித்தாண்டி முருகப்பெருமானின் பேராலயத்தில் நடைபெற்று வருகின்றது.


அந்தவகையில் நடைபெற்ற மயில் கட்டுத் திருவிழாவின் போது யாக பூசை, தீமிப்பு,  முருகப்பெருமானுக்கும் வள்ளியம்மைக்கும் இடையிலான திருமண நிகழ்வு, அன்றைய தினம் முதல்முதலாக சுவாமி மயில் வாகனத்தில் வெளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்கொடுக்கும் காட்சி என்பன மிகவும் முக்கியமான நிகழ்வுகளாக ஆலயத்தில் நடைபெற்றது.வரலாறும் பாராம்பரியம் நிறைந்த சித்தாண்டி கந்தனின் திருவிழாவில் மயில் கட்டு திருவிழாவை நாட்டின் பல பாகங்களிலும் இருந்து முருகப்பெருமானின் அருள்வேண்டி பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகைதந்திருந்தனர்.


மயில் கட்டுத் திருவிழா அனைத்து விசேட நிகழ்வுகளும் ப்ரம்மோற்சவ பிரதம குரு தருமை ஆகமப்பிரவீனா, ஆசீர்வாதசரபம் சிவஸ்ரீ.கைலாசநாத வாமதேவக் குருக்கள் (யாழ் - நயினை ஸ்ரீ நாகபூசணியம்மன் பேராலய ஆதீனகுரு) மற்றும் ஆலய ஸ்தானிக குரு சிவஸ்ரீ.க.குகன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624921

Translate